மேற்கு வங்கத்தில் 34 தொகுதி களுக்கான 7-ம் கட்ட தேர்தலில் 75.06 சதவீத வாக்குகள் பதி வாகின.
மொத்தம் 294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்டங்களாக 223 தொகுதிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் முடிந்து விட்ட நிலையில், 7-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
மால்டா, தெற்கு கொல்கத்தா, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 34 தொகுதிகள் தேர்தலை எதிர்கொண்டன. மொத்தம் 12,068 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 37 பெண்கள் உட்பட 268 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் 75.06 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்கத்தில் 8-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெறு கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்படுகிறது. இத்துடன் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாமிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 mins ago
இந்தியா
21 mins ago
விளையாட்டு
10 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
48 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
13 hours ago