கோவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13.83 கோடியைக் கடந்துள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 19,80,105 முகாம்களில் 13,83,79,832 பயனாளிகளுக்கு, கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 29 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
98-வது நாளான நேற்று (ஏப்ரல் 23, 2021), நாடு முழுவதும் 29,01,412 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,38,67,997 ஆக (83.49%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,19,838 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 74.15 சதவீதம் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 66,836 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 36,605 பேரும், கேரளாவில் 28,447 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 25,52,940 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 15.37 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,624 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.14 சதவீதமாகக் குறைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஓடிடி களம்
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
தமிழகம்
8 hours ago