கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேபூரில் இருந்து 'ஐ.எஃப்.பி. ரபா' என்ற படகில் 14 மீனவர்கள் கடந்த வாரம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரையில் இருந்து 43 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதுசிங்கப்பூரில் இருந்து வந்த ஐ.பி.எல். என்ற சரக்கு கப்பல், மீனவர்களின் படகு மீது வேகமாக மோதியது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்து நீரில் மூழ்கிய நிலையில், அதில் இருந்த 14 மீனவர்களும் காணாமல் போயினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலோர காவல் படை அதிகாரிகள், கப்பல்,படகு, ஹெலிகாப்டர் ஆகியவை மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன 12 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதல்கட்ட விசாரணையில், காணாமல் போன 12 மீனவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், தலா 2 பேர் மேற்கு வங்கம், அசாமைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
சினிமா
12 mins ago
தமிழகம்
34 mins ago
இந்தியா
32 mins ago
வாழ்வியல்
51 mins ago
சுற்றுலா
54 mins ago
வணிகம்
6 hours ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago