தொடர்ந்து 7-வது நாளாக புதிய உச்சம்: ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கரோனா பாதிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து 7-வது நாளாக பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 7 நாட்களாக பரவல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியபோது ஏற்பட்ட பாதிப்பை தாண்டி ஒரு நாள் தொற்று என்பது 7 நாட்களாக தொடர்ந்து உயர்ந்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,70,179 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா சிகிச்சை பெற்றவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 75,086 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,21,56,529 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு 12,01,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பரவல் தொடர்ந்து மகாராஷ்டிராவில் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 63,294 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகஅளவில் பாதிப்பு காணப்படுகிறது.

அதேபோல், இந்தியாவில் இதுவரை 25,78,06,986 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் நேற்று 11,80,136 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை 10,45,28,565 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

30 mins ago

ஓடிடி களம்

44 mins ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்