பாஜகவின் வகுப்புவாத அரசியல் கேரளாவில் எடுபடாது: காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கருத்து

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், பிடிஐ செய்தி நிறுவனத் துக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:

கேரள தேர்தலில் காங்கிரஸ் முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மே 2-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் போது, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.வகுப்புவாதம், லவ் ஜிகாத் தொடர்பான அச்சுறுத்தல், பிளவை ஏற்படுத்தும் வெறுப்பு அரசியல் ஆகியவற்றையே பாஜகவால் வழங்க முடியும். பலதரப்பட்ட மக்கள் வாழும் பன்முக சமூகம் கொண்ட கேரளாவில் இந்த அரசியல் எடுபடாது.

பாஜகவின் முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் தரன் அறிவிக்கப்பட்டுள்ளது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மதச்சார்பின்மை போன்ற விவகாரங்களில் பொதுவான கருத்துகளையே பொது மக்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

இவ்வாறு சசிதரூர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

28 mins ago

க்ரைம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

உலகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்