பிஹார் தேர்தல் முடிந்த பிறகான கருத்துக் கணிப்புக் குழப்பங்களிலிருந்து இன்னமும் டிவி சேனல்கள் விடுபடவில்லை என்பதற்கிணங்க, பிஹார் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படத் தொடங்கி சிறிது நேரத்துக்கெல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை என்று சில தொலைக்காட்சி செய்திகள் அறிவித்தன.
என்.டி.டிவி, தேஜகூ முன்னணியில் இருப்பதாக செய்தி வெளியிட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பர்க்கா தத், ட்விட்டரில், “145-149 இடங்களைக் கைப்பற்றி பாஜக கூட்டணி பிஹாரில் ஆட்சி அமைக்கத் தயாராகிறது.” என்று பதிவிட்டதும் நடந்தது.
டிவி-18 தொலைக்காட்சி மட்டுமே முதலில் நிதிஷ்-குமார் தலைமை மெகா கூட்டணி முன்னிலை வகிப்பதாக காலை 10 மணியளவில் செய்தி வெளியிட்டது.
8.30 மணிக்கு பாட்னாவில் உள்ள பாஜக தலைமைச் செயலகத்தில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் தூள்பறத்த, சிறிது நேரத்திற்கெல்லாம் மழையில் நனைந்த பட்டாசாக பாஜக கொண்டாட்டம் பிசுபிசுத்து போனது.
லாலு பிரசாத் இல்லத்திலிருந்து கொண்டாட்டச் சப்தங்கள் எழுந்தன. இதன் பிறகு அனைத்து டிவி சேனல்களும் இயல்பு நிலைக்குத் திரும்பின.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago