முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு கேஜ்ரிவால் வாழ்த்து

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. இதன் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் இன்று கருத்துப் பகிர்ந்த அவர், "மதவாத சக்திகளை வீழ்த்தி முதலமைச்சராக வெற்றி பெற இருக்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள்!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டபேரவை தேர்தலின் துவக்கம் முதலாகவே அதன் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமாருக்கு அதரவாக குரல் கொடுத்து வரும் கேஜ்ரிவால் தன் கட்சியின் சார்பில் பிஹாரில் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் அந்த முடிவில் இருந்து பின் வாங்கியவர், கடந்த அக்டோபர் 27-ல் டிவீட் செய்து தனது ஆதரவை தெரிவித்தார். அதில், நிதிஷ் குமாருக்கு வாக்களித்து அவரை மீண்டும் முதல்வராக்கும்படி பிஹார்வாசிகளிடம் கேட்டுக் கொண்டார்.

தொடர்ச்சியாக ட்வீட்டி வந்த அவர், “தற்போதைய சூழலில், பிஹாரில் பாஜகவின் தோல்வி என்பது நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்று” என்றும் கேஜ்ரிவால் குறிப்பிடிருந்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 mins ago

விளையாட்டு

9 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்