பிஹார் தேர்தலில் தோல்வி அடைந் துள்ளதால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிற கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நேற்று அவர் கூறியதாவது:
பிஹார் தேர்தலின்போது பாஜக பணபலம் உட்பட எத்தகைய வளங் களைப் பயன்படுத்தியது என நான் அறிவேன். அப்படி இருந்தபோதிலும் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிற கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
நிதிஷ் குமார் தெளிவான சிந்தனை கொண்டவர். அவர் மாநில அரசியலிலேயே கவனம் செலுத்து வாரா அல்லது தேசிய அரசியலில் ஈடுபடுவாரா என்பது குறித்து இப் போதே கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
36 mins ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago