பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்வி, பிரதமர் மோடியின் அரசின் செயல்பாடுகள் மீதான தீர்ப்பு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் அவரது செயல்பாடுகள் மீதான தீர்ப்பே பிஹார் தேர்தல் முடிவுகள்.
ஆளும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் வெற்றி, மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோரது அராஜகம் மற்றும் கர்வத்தை சுக்குநூறாக்கியுள்ளது.
வெறுப்பின் மீது கட்டப்படும் அரசியலை பிஹார் மக்கள் அனுமதிக்கவில்லை.
நாட்டை சகிப்பின்மை சூழ்ந்துள்ளது. இவையெல்லாம் முடிந்து நேயத்தின் அரசியல் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு கூறினார் அரவிந்த் கேஜ்ரிவால்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
54 mins ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago