தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) தொகையில் ரூ.2.5 லட்சம் தொகைக்கு மேலான முதலீடுகளுக்கு கிடைக்கும் வட்டி வருவாயைக் கணக்கிட புதிய வழிமுறைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இதன்படி தொழிலாளர்களின் முதலீட்டு தொகையில் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிமான தொகையை தனியாக பராமரித்து அதற்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தை கணக்கிடுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
இதன்படி வரி விதிப்புக்கு உட்படாத தொகையை தனியாகவும், வரி விதிப்புக்கு உள்ளாகும்தொகையை தனியாகவும் பராமரிக்கலாம் என பரிசீலிக்கப் படுகிறது. வரும் நிதி ஆண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்தொழிலாளர்கள் வருங்காலவைப்பு நிதியில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் தங்களது பங்களிப்பை செலுத்தியிருந்தால் அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டி வரி விதிப்புக்கு உட்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இவ்விதம் தனித்தனியாக பிரித்து கணக்கிடுவது என்பது மிகவும் கடினமான பணி என்று தணிக்கைத் துறையினர் மட்டுமின்றி வரித்துறை அதிகாரிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இரண்டு விதமான கணக்குகள்
இரண்டு விதமான கணக்குகளை பராமரிக்க நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.இதன்படி ரூ.2.5 லட்சத்துக்கும் மேலான தொகையை முதலீடு செய் வோரின் கணக்கு தனியாக பராமரிக்கப்படும். இதன்படி கூடுதலாக முதலீடு செய்து அந்த முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருவாய்வருமான வரி விதிப்புக்குட்படுத்து வதாகும். ஆனால் இவ்விதம் செயல்படுத்துவது கணக்கீட்டு முறையை மேலும் சிக்கலாக்கும் என்றே தோன்றுகிறது.
மேலும் இவ்விதம் கூடுதலாக பெறப்படும் வட்டி வருமானத்தை வரி விதிப்புக்குட்படுத்துவது தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டுமா அல்லது பணியாளர் ஓய்வூதியம் பெறும்போது வட்டியை கணக்கிட வேண்டுமா என்ற சிக்கலும் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
வணிகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
கல்வி
44 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago