பிஹாரில் ஆரம்பகட்ட முடிவுகள் ஏமாற்றம் தருகிறது: பாஜக எம்.பி. மனோஜ் திவாரி

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் நிலவும் தொகுதிகள் நிலவரம் ஏமாற்றத்தை அளிப்பதாக பாரதிய ஜனதாவின் டெல்லி எம்பியான மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

இது குறித்து 'தி இந்து'விடம் பிஹாரில் அதிகமாகப் பேசப்படும் போஜ்புரி மொழி திரைப்பட நடிகருமான மனோஜ் திவாரி கூறியதாவது:

"இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் நிலவரம் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதன் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் நரேந்தர மோடிக்கு பிஹார்வாசிகளிடம் அதிக ஆதரவு கிடைத்தது. எனவே, இன்னும் பொறுத்திருந்து முடிவுகளை பார்க்க வேண்டும்.

ஆனால், டெல்லியில் எங்கள் கட்சி தோற்றதால் ஏற்படும் அவலநிலை அனைவருக்கும் தெரியும். இது பிஹாரிலும் தொடராது எனக் கருதுகிறேன். எனவே, இன்னும் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பிஹாரின் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் நடிகரும் எம்பியுமான மனோஜ் திவாரி தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தார். போஜ்புரி மொழி பாடகருமான இவர் அதில் பாடிய மேடைப் பாடல்களுக்கு பலத்து வரவேற்பு கிடைத்தது.

டெல்லியின் சட்டசபை தேர்தலில் புதிதாக துவக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியிடம் பாஜகவிற்கு படுதோல்வி கிடைத்தது. இங்கு தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த காங்கிரஸிக்கு ஒரு தொகுதி கூடக் கிடைக்கவில்ல என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

56 mins ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்