மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகிக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

புத்தாண்டு நிகழ்ச்சியொன்றில் அமித் ஷா, இந்துக் கடவுள்கள் மீது ஆட்சேபகரமான கருத்துகள் கூறியதாக கைது செய்யப்பட்ட நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் புத்தாண்டு தினத்தன்று இந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்துக் கடவுள்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைப் பற்றி ஆட்சேபகரமான கருத்துகள் கூறப்பட்டதாக பாஜக எம்எல்ஏ மாலினி லட்சுமணன் சிங்கின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 1ஆம் தேதி முனாவர் பாரூகி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாரூகி ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனைப் பரிசீலனை செய்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், ஜனவரி 28 அன்று பிறப்பித்த உத்தரவில், நல்லிணக்கத்தை வளர்ப்பது என்பது அரசியலமைப்புக் கடமைகளில் ஒன்றாகும் என்பதைக் குறிப்பிட்டு அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாரூகி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டு மனு தொடர்பாக நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு மத்தியப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், முனாவர் பாரூகிக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. உத்தரப் பிரதேசத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட தனி வழக்கில் வாரண்ட் உத்தரவையும் நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்