அசாமில் காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்: அமித் ஷா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அசாமில் பாஜக ஆட்சி செய்ய மக்கள் இன்னும் ஐந்து ஆண்டுகள் கொடுத்தால் குண்டுகள் அல்லாத நிலையை உருவாக்குவோம் என அசாம் மாநிலத்தல் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா அசாமில் நடைபெற்ற முதல் தேர்தல் பேரணில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘பாஜக வகுப்புவாத கட்சி என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால் அவர்கள் கேரளாவில் முஸ்லிம் லீக் உடனும், அசாமில் ஏ.ஐ.யு.டி.எஃப் உடனும் கூட்டணி வைத்துள்ளனர். காங்கிரஸ்- ஏஐயுடிஎஃப் ஆட்சி ஏற்பட்டால் அசாம் பாதுகாப்பாக இருக்காது.

காங்கிரஸ் அசாமில் பிரித்தாளும் கொள்கை மூலம் ஆட்சி செய்தது. 20 வருடத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். குண்டுகளால் அசாம் இளைஞர்களை காங்கிரஸ் கொன்றது.

இன்னும் ஐந்தாண்டுகள் எங்களிடம் வழங்கினால் குண்டுகள் அல்லாத, போராட்டம் அல்லாத, வெள்ளப்பெருக்கு அல்லாத நிலையை அசாமில் உருவாக்குவோம்.’’
இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்