டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச பல் சிகிசை முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 2,700 பேர் தம் சொத்தைப் பற்களை பிடுங்கி பலனடைந்துள்ளனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாக்களை வாபஸ் பெறுவது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் போராட்டம் தொடர்கிறது.
இதில், கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை வசதிகளும் கிடைக்கின்றன. இதில் ஒன்றாக கடந்த நவம்பர் 28 முதல் இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
ஹரியாணாவின் பிரபல பல் மருத்துவரான சன்னி அகர்வால் தலைமையிலானதில் இதுவரை 2,700 விவசாயிகள் தம் சொத்தை பற்களை பிடுங்கி உள்ளனர். தாம் இருக்கும் இடத்தில் எளிதாகக் கிடைக்காத இந்த வசதியால் விவசாயிகள் பலரும் பயன் பெறுகிறார்கள்.
இதுபோல், பற்களை பிடுங்கியவர்களுக்காக குறிப்பிட்ட வகை உணவும் அந்த முகாம் அருகிலேயே சமைத்து வழங்கப்படுகிறது. இதனால், இந்த மருத்துவ வசதியை பயன்படுத்திக் கொள்ள அந்த எல்லைகளை சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வந்தபடி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
51 mins ago
ஜோதிடம்
26 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago