தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு: தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்

By செய்திப்பிரிவு

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி முனை மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மேலேடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

அதன்பின் இப்பகுதியில் மழைப்பொழிவு குறையும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2021 ஜனவரி 12 மற்றும் 13ம் தேதிகளிலும், கேரளா மற்றும் மாஹேவில் 12ம் தேதியும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்