திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தசரா விடுமுறை காரணமாக, கடந்த மாதம் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவைவிட இந்த விழாவுக்கு அதிக பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 6 லட்சம் லட்டு பிரசாதங் கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள தாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் நேற்று தெரிவித்தார்.
மேலும் பக்தர்களின் பாதுகாப் புக்காக 1,000 கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருமலைக்கு 2 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17-ம் தேதி இரவு 9 மணி முதல் 19-ம் தேதி காலை 10 மணி வரை திருமலைக்கு இருசக்கர வாகனங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.நேரடியாக வரும் விஐபி பக்தர் கள் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ் தானம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
உலகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
9 hours ago