தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்இந்திய தீபகற்பப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஜனவரி மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வருமாறு:

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இயல்பான வெப்பநிலை நிலவும்.

முதல் வாரத்திற்கான மழை அளவு: (ஜனவரி 07 முதல் 13 வரை): தென்கிழக்கு அரபிக் கடல், தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்இந்திய தீபகற்பப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால், கேரளா, மாஹேவில் வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் பரவலாக மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 2020 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக தென் இந்திய தீபகற்பத்தில் ஏற்பட்ட நிகழ்வு: தென் தீபகற்பத்தின் வானிலை ஆய்வு துணை பிரிவுகளான தமிழ்நாடு கடற்கரை ஆந்திரப்பிரதேசம் ராயலசீமா கேரளா, கர்நாடகா ஆகியவை கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) சுமார் 30% மழையைப் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த பருவ காலத்தில் தமிழ்நாட்டில் 48 சதவீத மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

வணிகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்