மத்கியால் வகை செம்மறியாட்டை ரூ.70 லட்சத்துக்கு கேட்ட வியாபாரி

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் மத்கியால் கிராமத்தில் உள்ள செம்மறியாடுகள் அதிகம்புகழ்பெற்றவை. இதன் வித்தியாசமான தோற்றத்துக்கும், இதன் இறைச்சிக்கும் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கி வருகின்றனர். மத்கியால் கிராம மக்கள் அனைவருமே செம்மறியாடு வளர்த்து அதை விற்று வாழ்க்கை நடத்தி வருபவர்கள். மத்கியால் வகை செம்மறியாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் மகாராஷ்டிர கால்நடை வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் மத்கியால் கிராமத்தைச் சேர்ந்த பாபு மெட்காரி என்ற விவசாயி வளர்த்து வரும் செம்மறியாட்டை சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.70 லட்சம் வரை விலை கேட்டுள்ளார்.

இதுகுறித்து பாபு மெட்காரி கூறியதாவது:

என்னிடம் 200-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. என்னுடைய ஆட்டின் பெயர் சர்ஜா. இந்த ஆடு எனக்கு அதிக அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகிறேன். ஒருவர் இந்த ஆட்டை ரூ.70 லட்சம் வரை கேட்டார். தர விருப்பம் இல்லாததால் ஆட்டின் விலை ரூ.1.5 கோடி என்றேன். அதன் பின்னர் அந்த வியாபாரி வாங்காமல் சென்றுவிட்டார்.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி எங்கள் கிராமம் வழியாக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றார். பின்னர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார். அப்போது முதல் இந்த ஆட்டுக்கு நாங்கள் மோடி என்று பெயர் வைத்து விட்டோம்.

அது எங்கள் அதிர்ஷ்டக்கார ஆடு. எங்கள் வீட்டின் உறுப்பினர் போலவே எங்களிடம் இருக்கிறது. என்னிடம் மத்கியால் வகை செம்மறியாடுகள் பல இருந்தாலும், சர்ஜா ஆடு எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த சர்ஜா செம்மறி ஆடு போடும் குட்டிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை போகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

46 mins ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்