பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றுபதிவிட்டிருப்பதாவது: எனக்கு கடந்த சில தினங்களாக கரோனாவுக்கான அறிகுறிகள் லேசாக இருந்தன. இதையடுத்து சளி மாதிரியை பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு கரோனாஉறுதியானது. எனினும் நான் நலமாக இருக்கிறேன்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே என்னைதனிமைப்படுத்திக் கொண்டேன். அவர்களது வழிகாட்டுதல்களை பின்பற்றி வருகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தங்களைதனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஜே.பி.நட்டாகுணமடைய பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் ஜே.பி.நட்டா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நட்டா குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ஜே.பி.நட்டா விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் அவருக்காகவும் அவரது குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுலா
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago