திருப்பதி லட்டு பிரசாதம் வழங்குவதாக பணம் பறித்த போலி இணையதளம் முடக்கம்

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி லட்டு பிரசாதம் வழங்குவதாகக் கூறி பணம் வசூலித்த போலி இணையதளத்தை தேவஸ்தானம் முடக்கி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதத்தை உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கிறோம் என போலி இணைய தளம் உருவாக்கப்பட்டிருந்தது. www.balajiprasaddam.com எனும் இணையதளம் வழியாக பல பக்தர்கள் பணம் செலுத்தி ஏமாந்து வந்தனர்.

இதுகுறித்து சிலர் புகார் தெரிவித்ததால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி இந்த போலி இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். அதன்படி தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினர், இந்த இணையதளத்தை முடக்கினர். மேலும், திருமலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

வணிகம்

26 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

36 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

9 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்