பெங்களூருவில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்ததால், மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 2 இளைஞர்களையும், அவர்களின் பெற்றோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள சுபாஷ் நகரை சேர்ந்த மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு செல்லும் வழியில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி, மோகன் ஆகிய இருவரும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.இதுபற்றி மீனா தனது பெற்றோரிடம் தெரிவித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிக்கஜாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், வழக்கு பதிவு செய்யாத காவல் துறையினர் இருதரப்பையும் அழைத்து சமரசம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் மீனா வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழிமறித்த கிருஷ்ணமூர்த்தி, மோகன் இருவரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தியின் தாய் லட்சுமி மற்றும் மோகனின் தந்தை மூர்த்தி ஆகியோர் மீனாவை திட்டியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இளைஞர்கள் இருவரும் மீனாவின் ஆடைகளை அவிழ்த்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளனர். இனி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் இணைய தளத்தில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மீனா நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கஜாலா காவல் துறையினர் மீனா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘கிருஷ்ணமூர்த்தி, மோகன் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த இருவரும், அவர்களது பெற்றோர் முன்னிலையில் எனது ஆடைகளை அவிழ்த்து ஆபாசமாக புகைப்படம் எடுத்தனர். எனது மானம் போனதால் தற்கொலை முடிவை எடுத்துள்ளேன். என் சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக் கப்பட வேண்டும். எனக்கும், என் குடும் பத்துக்கும் நீதி வழங்க வேண்டும்.இக்கடிதத்தை எனது முழு மனதுடன் நானே எழுதியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, மோகன், கிருஷ்ணமூர்த்தியின் தாய் லட்சுமி, மோகனின் தந்தை மூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
உலகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago