ஆந்திராவில் நிவர் புயலால் உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்

By செய்திப்பிரிவு

ஆந்திராவில் நிவர் புயலால் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

ஆந்திராவில் நிவர் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சித்தூர், கடப்பா மற்றும் நெல்லூர் மாவட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் அவர் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் ஆட்சியர்கள், வருவாய், பஞ்சாயத்து, மாநகராட்சி, நகராட்சி, வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசும்போது, "நிவர் புயலால் ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்கப்படும். புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

12 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்