தெலுங்கு தேச தலைவர்கள் மூவரை மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்

By பிடிஐ

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் 3 பேரை மாவோயிஸ்டுகள் கடந்த 5-ம் தேதி கடத்தினர். இந்நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு அவர்களை இன்று (வியாழக்கிழமை) விடுவித்துள்ளனர்.

தெலுங்கு தேச கட்சித் தலைவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டதை விசாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பிரவீண் உறுதி செய்தார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் அவர் அளித்த பேட்டியில், "மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மமிடி பாலைய்யா படால், வண்டாலம் பாலைய்யா, முக்காலா மகேஷ் ஆகிய மூவரும் இன்று காலை 5 மணியளவில் அவர்கள் வீடுகளுக்குச் சென்றடைந்தனர்.

முன்னதாக, கோத்தகுடா பகுதியில் இருக்கும் பாக்சைட் வளங்கள் சுரண்டப்படுவதை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும் அது குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி மூவரையும் மாவோயிஸ்டுக்ள வரவழைத்தனர்.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு என்று அழைத்துவிட்டு மூவரையும் கடந்த 5-ம் தேதி (அக்டோபர் 5-ல்) கடத்திச் சென்றனர். தற்போது 10 நாட்களுக்குப் பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்