உ.பி.யில் பசுவைக்கொன்ற நபரை சுட்டுப் பிடித்த போலீஸாருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் குண்டடிபட்ட நிலையில் பசுவைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
நொய்டாவில், 58வது செக்டர் காவல் நிலைய வரம்பில் பிரிவு 62 இல் உள்ள ரசூல்பூர் நெவாடா கிராமம் அருகே சாலையில் சனிக்கிழமை இரவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த குற்றம் சாட்டப்பட்ட தாஹிர் அலி என்பவரும் அவரது இரு கூட்டாளிகளும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது அவர்கள் போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதனால் துப்பாக்கிச் சண்டை வெடித்தது, அதில் தாஹிர் என்பவர் காயமடைந்தநிலையில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் தப்பித்து ஓடிவிட்டனர்.
சம்பல் நகரைச் சேர்ந்த தாஹிர் அலி பசுவைக் கொன்ற வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வருபவர்.
குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து சில வெடிமருந்துகள், இரண்டு வெட்டுக் கத்திகள், நான்கு ஊசிகள் மற்றும் இரண்டு பாட்டில் போதைப்பொருட்களுடன் சட்டவிரோத நாட்டுப்புற கைத்துப்பாக்கியையும் போலீசார் மீட்டுள்ளனர்.
துப்பாக்கிச சண்டையின்போது தப்பியோடி தலைமறைவான தாஹிரின் நண்பர்கள் யார்யார் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தாஹிர் ஏற்கெனவே மீது கொலை முயற்சி, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டம் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பசுவைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாஹிரை சுட்டுப்பிடித்ததற்காக, போலீஸாருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago