தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைவு: இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தைக் கடந்தது

By பிடிஐ

இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தைக் கடந்தது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 50,000த்துக்கும் கீழ் குறைந்தது.

கரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 73.15 லட்சமாக உள்ளது. இதன் மூலம் தேசிய கரோனா நலமடைந்தோர் விகிதம் 90.99% ஆக உள்ளது.

இது தொடர்பாக வியாழனன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்து 40 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 49,881 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 517 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,20,517 ஆக அதிகரித்துள்ளது.

பலி விகிடம் 1.49% ஆகக் குறைந்துள்ளது.

நாடு முழுதும் 6 லட்சத்து 3 ஆயிரத்து 687 பேர் கரோனாவுக்காக இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 7.5% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தமாக 10 கோட்யே 65 லட்சத்து 63 ஆயிரத்து 440 சாம்பிள்கள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன. அக்.28ம் தேதி மட்டும் 10 லட்சத்து 75 ஆயிரத்து 760 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆக.7ம் தேதி 20 லட்சத்தைக் கடந்த நிலையில் அக்டோபர் 11ம் தேதி 70 லட்சத்தைக் கடந்தது. தற்போது 80 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்