உத்தரப்பிரதேசத்தில் உள்ளூர் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுபோன்ற சம்பவம் 4 மாதங் களில் 3 வது தடவை நடந்துள்ளது.
உள்ளூர் செய்தி அலைவரிசை டிவியில் நிருபராக பணிபுரிந்து வந்தவர் ஹேமந்த்யாதவ் (45). இவரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபரக்ள் நேற்று முன்தினம்இரவு துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் அமித்வர்மாதெரிவித்தார்.
நிருபரின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் சண்டவ்லி காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளதாக வும் புலனாய்வை விரைவுபடுத்திட 3 சிறப்பு காவல் குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும் வர்மா மேலும் கூறினார்.
ஜூன் மாதத்தில் பத்திரிகையா ளர் ஜகேந்திரசிங் ஷாஜகான்பூரில் அவரது வீட்டில் நடந்த போலீஸ் சோதனையின்போது சுட்டுக் கொல்லப்படடார். ஜூன் 8-ம்தேதி அவர் உயிரிழந்தார். போலீஸ் அதி காரிகளே அவரை சுட்டுக்கொன்ற தாக அவரது மனைவி புகார் தெரிவித்தார்.
பரேலி மாவட்டத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தில் இந்தி தினசரி பத்திரிகையின் பகுதி நேர நிருபர் சஞ்சய் பாடக் ஆகஸ்ட் மாதம் 2 மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
6 mins ago
க்ரைம்
12 mins ago
க்ரைம்
21 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago