ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 10-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெல்ல நகர்ந்து மத்திய வங்கக் கடலின் மேற்கு பகுதியில் மையம் கொண்டது. பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது 13-ம் தேதி வடக்கு ஆந்திர கடற்கரையோரம், காக்கிநாடாவுக்கு மிக அருகில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரம் முழுவதும் இடைவிடாது அதி கனமழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரில் சுமார் 1,500 குடியிருப்புகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுகளாக காட்சி அளிக்கின்றன. ஏராளமானோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவிக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகளிலும் கடந்த பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பிரகாசம் அணையில் இருந்து உபரி நீர்வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், அவைகளை அப்புறப்படுத்தும் பணிகள் வேகப்படுத்தப் பட்டுள்ளன.
ஆந்திராவில் இதுவரை மழை, வெள்ளத்தில் 10 பேர் உயி ரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 mins ago
விளையாட்டு
11 mins ago
சினிமா
12 mins ago
இந்தியா
49 mins ago
தமிழகம்
46 mins ago
சினிமா
52 mins ago
இந்தியா
33 mins ago
கருத்துப் பேழை
42 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago