பெங்களூருவைச் சேர்ந்த மருதர் ஆர்ட்ஸ் என்ற ஏல நிறுவனம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் சிலவற்றை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் தண்டி சத்யாகிரக போராட்டத்தை தொடங்குவதற்கு முன் 1930 மார்ச்சில் காங்கிரஸ் கமிட்டி செயலாளருக்கு கைப்பட எழுதிய கடிதம் ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை ஆனது.
மேலும் நவாநகர் குமார் ரஞ்சித் சிங்குக்கு காந்தி எழுதிய கடிதம் ரூ.2.25 லட்சத்துக்கும், காந்தி கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்று ரூ.1.7 லட்சத்துக்கும் விற்பனை ஆனது. இந்த ஏலத்தில் 1969-ல் வெளியிடப்பட்ட சிறப்பு எண்களைக் கொண்ட ஒரு ரூபாய் நோட்டுகளும் ஏலம் விடப்பட்டன. 100000, 111111, 222222, 444444 என எண்களைக் கொண்ட இந்த ஒரு ரூபாய் நோட்டுகள் தலா ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தொழில்நுட்பம்
13 mins ago
இந்தியா
27 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
43 mins ago
விளையாட்டு
51 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago