இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கையும் 55 லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 75 ஆயிரத்து 829 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்தபாதிப்பு 65 லட்சத்து 49 ஆயிரத்து 373ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55 லட்சத்து 9 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 84.13 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 37 ஆயிரத்து 625 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14.32 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 940 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.55 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 278 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 100 பேர், உத்தரப்பிரதேசத்தில் 60 பேர், தமிழகத்தில் 65 பேர், மேற்குவங்கத்தில் 62 பேர், பஞ்சாபில் 61 பேர், ஆந்திராவில் 41 பேர், டெல்லியில் 34 பேர், உயிரிழந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60லட்சத்ைதயும் எட்டியது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 7 கோடியே 89 லட்சத்து 92 ஆயிரத்து 534 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 42 ஆயிரத்து 131 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
தொழில்நுட்பம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
கல்வி
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
தமிழகம்
8 hours ago