நாட்டின் எந்த பகுதியிலும் பாலியல் பலாத்காரம் நடக்கக்கூடாது; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: கேஜ்ரிவால் கடும் சாடல்

By செய்திப்பிரிவு

நாட்டின் எந்த மூலையிலும் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கக்கூடாது, இதை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர்.

பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து நேற்று ஹத்ராஸ் சென்றனர். போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திலும், தள்ளுமுள்ளுவிலும் ராகுல் காந்தி கீழே தள்ளிவிடப்பட்டார். அதன்பின் போலீஸார் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை கைது செய்து அழைத்துச் சென்று சில மணிநேரத்துக்குப்பின் விடுவி்த்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரீக் ஓ பிரையன் தலைமையில் காகோலி கோஷ் தஸ்திதார், பிரதிமா மண்டல், முன்னால் எம்.பி. பிரதிமா மண்டல் ஆகியோர் ஹர்தாஸ் மாவட்டத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்றனர்.

ஆனால் ஹர்தாஸ் மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இருக்கும் கிராமத்துக்கு 1.5 கி.மீ தொலைவுக்கு முன்பே திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் எம்.பி. தலைமையிலான குழுவினர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் ஹத்ராஸ் மாவட்டத்தி்ல் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு நியாயம் வழங்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று உ.பி. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டு கேஜ்ரிவால் பேசியதாவது:

‘‘நாட்டின் எந்த மூலையிலும் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கக்கூடாது.
இதை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது. உ.பி., ம.பி., ராஜஸ்தான், மும்பை, டெல்லி என நாட்டின் எந்த பகுதியிலும் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கக் கூடாது.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்