கோவிட் தொற்றிலிருந்து அதிகளவில் குணமடைவது தொடர்கிறது. குணமடைந்தோர் வீதம் இன்று 81.25%-ஆக உள்ளது.
தீவிர யுக்திகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 5 நாட்களாக, நாட்டில் தினந்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 89,746 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 83,347 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,87,613-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று 81.25%-ஆக உள்ளது.
உலகளவில் இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம். உலகளவில் குணமடைபவர்களில் இந்தியாவின் பங்கு 19.5%.
17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் புதிய நோயாளிகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
குணமடைந்தவர்களில் 75% பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, ஒடிசா, தில்லி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் புதிதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர், ஆந்திராவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
13 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago