ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பள்ளிக்கு சிறப்பு அந்தஸ்து: கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொலி மாநாட்டில் அறிவிப்பு

By கா.சு.வேலாயுதன்

காணொலி மாநாடு மூலம் மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் 34 உயர்நிலைப் பள்ளிக் கட்டிடங்களை இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்துப் பேசினார்.

அதில், ‘‘சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக 14 அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் ரூ.3 கோடி செலவில் கட்டி முடிக்கப்படும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒரு பள்ளியைச் சிறப்பான மையமாக மாற்றுவதற்கான மாநில அரசின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பள்ளிகள் உருவாக்கப்படுகின்றன!’’ என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தனது உரையில் பேசும்போது, “பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.3,129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 250 புதிய பள்ளிக் கட்டிடங்களின் கட்டுமானம் விரைவில் தொடங்கப்படும். திட்ட நிதியைப் பயன்படுத்தி 350 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு தொகுதியும் இல்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் சிறப்பான மையங்கள் அமைக்கப்படும்!” என்று குறிப்பிட்டார்.

KIIFB நிதியுதவியுடன் 141 பள்ளிகளில் தலா ரூ.5 கோடி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. பல தொகுதிகளில், KIIFB எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வழங்கியுள்ளது. இந்தப் பள்ளிகளில் 7.55 லட்சம் சதுர அடி உயர் தொழில்நுட்ப வகுப்பறைகள், சமையலறைத் தொகுதிகள், சாப்பாட்டு அரங்குகள், கழிப்பறை தொகுதிகள், ஆய்வகங்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் உள்ளன.

10 மாவட்டங்களில் வரும் 34 தொகுதிகளில் உள்ள பள்ளிகளை பினராயி விஜயன் இன்று திறந்து வைத்துள்ளார்.

‘கரோனா தொற்று காலகட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆன்லைன் கல்வி முறை வெற்றிகரமாக இருக்கிறது. இதன் மூலம் கேரளா மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது!’ என்று கூறிய முதல்வர், ‘திறந்து வைக்கப்படும் பள்ளிகள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் விழக்கூடாது!’ என்று பினராயி விஜயன் எச்சரித்தார்.

மாநிலம் முழுவதும் பலராமபுரம் முதல் செல்லக்கரே வரை 19 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விழாவுக்கு பொது அறிவுறுத்தல் அமைச்சர் பேராசிரியர் சி.ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். மற்ற அமைச்சர்கள், பொது கல்வி செயலாளர், ஏ ஷாஜகான் ஐ.ஏ.எஸ்; கல்வி பணிப்பாளர் நாயகம், கே.எஸ். ஜீவன்பாபு ஐ.ஏ.எஸ் மற்றும் கைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்வர் சதாத் ஆகியோர் ஆன்லைன் செயல்பாட்டிற்கு வந்திருந்தனர்.

அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அந்தந்தப் பள்ளிகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நேரடியாக விழாவில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்