பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழைக்கு வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 5 கட்டிடத் தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.
பெங்களூரு ஹெக்டே நகர் அருகே 'சிக்னேச்சர் கன்ஸ்ட்ரக்சன்' என்ற கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறது. இதில் வேலை செய்யும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிப்பதற்காக கட்டிடத்தின் அருகே மண் சுவர், இரும்பு கூரையால் ஆன தற்காலிக வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்தது. அதிகாலை 4 மணி அளவில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், உறங்கிக் கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடு களுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந் தனர். காயமடைந்த 27 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன உரிமையாளர், பொறியாளர், திட்டபொறியாளர், மேற்பார்வை பொறியாளர் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
6 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
39 mins ago
உலகம்
50 mins ago
உலகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago