இந்தியாவில் ஒரே நாளில் 8.5 லட்சம் கரோனா பரிசோதனைகள்; இறப்பு விகிதம் 1.95 சதவீதமாக   குறைந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் ஒரே நாளில் கிட்டதட்ட 8.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. குணமடைந்தவர்கள் விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து 71.17 சதவீதமாகியுள்ளது. இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து 1.95 சதவீதமாகியுள்ளது.

ஒரு நாளைக்கு 10 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன், பரிசோதனை வசதிகளை தொடர்ந்து அதிகரித்ததால், இந்தியா இதுவரை இல்லாது ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை செய்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,48,728 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,76,94,416 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

“கோவிட்-19-ஐ கருத்தில் கொண்டு பொது சுகாதாரம் மற்றும் சமுதாய நடவடிக்கைகளுக்கு ஏற்ப பொது சுகாதார அளவுகோலை சரி செய்தல்” என்ற தலைப்பிலான நெறிமுறை அறிவிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. இதில் கோவிட்-19 தொற்றைக் கண்காணிப்பது மற்றும் பரிசோதிப்பது தொடர்பாக விளக்கும் போது, 10 லட்சம் மக்கள் தொகைக்கு நாளொன்றுக்கு 140 பரிசோதனைகளை, ஒரு நாடு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

பத்து லட்சம் மக்கள் தொகைக்கு நாள் ஒன்றுக்கு 603 பரிசோதனைகள் என்பது இந்தியாவின் தேசிய சராசரியாக இருந்தாலும், 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதைவிட அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 958, தனியார் ஆய்வகங்கள் 493 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1451 ஆக உயர்ந்துள்ளது. இதன் விவரங்கள்:

· ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்: 749 (அரசு: 447 + தனியார்: 302)

· ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 586 (அரசு: 478 + தனியார்: 108)

· சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 116 (அரசு: 33 + தனியார்: 83)

தீவிர பரிசோதனைகள், தடம் அறிதல் மற்றும் தரமான சிகிச்சைகள் ஆகியவை குணமடைபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இது, இன்று 71.17% ஆக உள்ளது. கோவிட் -19 தொற்றால் குணமடைந்தவர்கள் மொத்தம் 17.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளனர் (17,51,555).

மருத்துவக் கண்காணிப்பில் (6,61,595) உள்ளவர்களைவிட அதிகமாக சுமார் 11 லட்சம் பேர் (10,89,960) தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்