பாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த பாதை

By செய்திப்பிரிவு

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில்,பாபர் மசூதியில் தொடங்கி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா வரையிலான முக்கிய நிகழ்வுகளின் சுருக்கம் வருமாறு:

1528: முகலாயப் பேரரசர் பாபரின் சேனைத் தலைவர் மீர் பக்கியால் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது.

1885 : அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் அதன் அருகில் ராமருக்கு கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் எனவும் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மகந்த் ரகுவீர் தாஸ் வழக்கு தொடர்ந்தார். இதை நீதிமன்றம் நிராகரித்தது.

1949: பாபர் மசூதியின் மைய குவிமாடத்தின் கீழே குழந்தை ராமர் சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானதால் அந்த கட்டடம் மூடப்பட்டது.

1950: குழந்தை ராமர் சிலைகளை வழிபட உரிமை கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் வழக்கு தொடர்ந்தார்..

1959: சர்ச்சைக்குரிய இடத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி நிர்மோகி அகாடா வழக்கு தொடர்ந்தது.

1961 : உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வக்பு வாரியமும் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது.

1986 பிப்.1: இந்து மதத்தினர் மட்டும் வழிபாடு நடத்த சர்ச்சைக்குரிய இடத்தை திறக்குமாறு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1989 அக்.14: சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதுள்ள நிலையே தொடரலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1990 செப்.25: அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்காக பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை தொடங்கினார்.

1992 டிச.6: கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது

1993 ஏப்.3: சர்ச்சைக்குரிய இடத்தில் சில ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த மத்திய அரசு அயோத்தி சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் பல்வேறு கோணங்களை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றார்.

1994 அக்.24: இஸ்மாயில் பரூக்கி தாக்கல் செய்த மனுவில் மசூதி, இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

2002 ஏப்.: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தத் தொடங்கியது.

2010 செப். 30: சர்ச்சைக்குரிய நிலத்தை வக்பு வாரியம், நிர்மோகி அகாடா மற்றும் லாம் லல்லாவுக்கு மூன்றாகப் பிரித்து வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2011 மே 9: அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

2017 மார்ச் 21: அயோத்தி வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும்படி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் ஆலோசனை வழங்கினார்.

2017 அக்.7: அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

2018 பிப்.8: உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணையை தொடங்கியது.

2019 ஜன.8: அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என நீதிமன்றம் அறிவித்தது.

2019 மார்ச் 8: இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய முன்னாள் நீதிபதி எப்எம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர்  ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோரை நியமித்தது.

2019 ஆக.1: மத்தியஸ்தக் குழுவினர் தங்களின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சமரச முயற்சி தோல்வியுற்றதாக தெரிவித்தனர்.

2019 ஆக.6: அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்ற அமர்வு நாள்தோறும் விசாரிக்கத் தொடங்கியது.

2019 ஆக.16: அயோத்தி வழக்கில் தினசரி விசாரணை நிறைவு பெற்றது.

2019 நவ.9: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது.

2020 பிப்.5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை பிரதமர் மோடி மக்களவையில் அறிவித்தார்.

2020 ஆக.5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்