‘‘உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலித்தவர் சுஷ்மா ஸ்வராஜ்’’- முதலாமாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிரொலித்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தை நினைவு கூறுகிறேன். துரதிருஷ்டவசமாக நிகழ்ந்த அவரது திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிற்காக சுயநலமின்றி பெரும் சேவையாற்றியவர் அவர். உலக அரங்கில் இந்தியாவின் குரலாக எதிராலித்தவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார்’’ எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் மறைவையொட்டி நடந்த இரங்கல் கூட்டத்தின் வீடியோ பதிவையும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

2 mins ago

சினிமா

8 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்