அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து: காஷ்மீர் அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் முர்மு அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் ஜூன் மாதம்தொடங்கும். எனினும், கரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாத்திரை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் காஷ்மீர் தலைமைச் செயலர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் ஜம்முவில் ஆய்வு செய்தனர். இக்கூட்டத்தில் யாத்திரைக்கு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் நடந்து வரும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஜூலை மாத இறுதியில் அமர்நாத் யாத்திரையை தொடங்க அரசு திட்டமிட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் முர்மு அறிவித்துள்ளார். நாடுமுழுவதும் கரோனா பரவி வரும் சூழலில் தற்போதைய சூழலில் அமர்நாத் யாத்திரை நடத்துவது உகந்ததாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆளுநர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

க்ரைம்

49 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்