இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்திருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவ தற்காக, கரோனா நோயாளிகளை விரைவில் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (ஐஐடி), கரோனா வைரஸ் தொற்றை துல்லியமாக கண்டறியும் பரிசோதனைக் கருவியை அண்மையில் தயாரித்தது.
ஆர்.டி. – பிசிஆர் முறைஅடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சோதனைக் கருவிதான் உலகிலேயே மிக விலை மலிவான கரோனா சோதனைக் கருவியாக கருதப்படுகிறது. இதன் விலை ரூ.650-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரேஆகியோர் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். ‘நியூ டெக் மெடிக்கல்’ நிறுவனத்தால் ‘க்ரோஷுர்’ (crosure) என்ற பெயரில் இந்தக் கருவி விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் மூலம் ஒரு மாதத்துக்கு இனி 20 லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்ய முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 mins ago
விளையாட்டு
19 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago