கர்நாடக உயர்கல்வித் துறையைநிர்வகிக்கும் துணை முதல்வர் அஷ்வத் நாராயணா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடந்த 3 மாதங்களாக கல்லூரித் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இளங்கலை, முதுகலை, பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களின் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் ரத்துசெய்யப்படுகின்றன. அனைவரும்தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் அளிக்கப்படும்.
கல்லூரிகளில் இறுதி ஆண்டு அல்லது இறுதிப் பருவத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பரில் தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2020-21-ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ, பொறியியல், வேளாண் பொது நுழைவுத்தேர்வு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை ஆகஸ்டில் தொடங்கலாம். வரும் செப்டம்பர்1-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூருவில் நேற்று ஒரே நாளில் 26 போலீஸாருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago