புனேயில் முழு ஊரடங்கு அறிவிப்பு: மதுபானக் கடைகளில் திரண்ட கூட்டம்

By செய்திப்பிரிவு

புனேயில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே வாகனப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மும்பை தவிர புனே உட்பட மற்ற சில நகரங்களிலும் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து புனேயில் வரும் 13-ம் தேதி முதல் 23-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புனேயில் இன்று மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் வரிசையில் நீண்ட நேரம் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர். சில இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்