இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 17 ஆயிரம் பேர் அதாவது 16 ஆயிரத்து 922 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 418 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனாவிலிருந்து மீண்டு, வீடுதிரும்பியோர் எண்ணிக்கை 2 லட்சத்து71 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைவது 57.43 சதவீதமாக உயர்ந்துள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 418 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 14ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 208 பேர், டெல்லியில் 64 பேர், தமிழகத்தில் 33 பேர், குஜராதத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் 14 பேர், மேற்கு வங்கத்தி்ல் 11 பேர், ராஜஸ்தான், ஹரியாணாவில் 10 பேர், மத்தியப்பிரதேசத்தில் 9 பேர், உத்தரப்பிரதேசம், பஞ்சாபில் தலா 8 பேர், ஆந்திரா, தெலங்கானா, உத்தரகாண்டில் தலா 5 பேர், பிஹார், கோவா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 6,739 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,365 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,735 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 866 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 591 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 534 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 596 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 375 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 225 ஆகவும், ஹரியாணாவில் 188 ஆகவும், ஆந்திராவில் 124 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 164 பேரும், பஞ்சாப்பில் 113 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 88 பேரும், பிஹாரில் 57 பேரும், ஒடிசாவில் 17 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரகாண்டில் 35 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 11 பேரும், அசாமில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 9 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 73,792 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,390 பேராக அதிகரித்துள்ளது. 41,437 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 468 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 37,763 ஆகவும் அதிகரித்துள்ளது.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 28,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,088 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 16,009 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 12,448 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 19,557 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 15,173 பேரும், ஆந்திராவில் 10,331 பேரும், பஞ்சாப்பில் 4,627 பேரும், தெலங்கானாவில் 10,444 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 6,422 பேர், கர்நாடகாவில் 10,118 பேர், ஹரியாணாவில் 12,010 பேர், பிஹாரில் 8209 பேர், கேரளாவில் 3,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,888 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 5,752 பேர், சண்டிகரில் 420 பேர், ஜார்க்கண்டில் 2,207 பேர், திரிபுராவில் 1,259 பேர், அசாமில் 6,198 பேர், உத்தரகாண்டில் 2,623 பேர், சத்தீஸ்கரில் 2,419 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 806 பேர், லடாக்கில் 941 பேர், நாகாலாந்தில் 347 பேர், மேகாலயாவில் 46 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 120 பேர், புதுச்சேரியில் 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 166 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 142 பேர், சிக்கிமில் 79 பேர், மணிப்பூரில் 970 பேர், கோவாவில் 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
41 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago