ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன் மோகன் ரெட்டி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு: வரும் 26-ம் தேதி தொடங்குகிறார்

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறித்தி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, குண்டூரில் வரும் 26-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளதாக ஹைதராபாத்தில் நேற்று அறிவித்தார்.

ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று தனது கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தாலும் மத்திய, மாநில அரசுகள் திட்டவட்டமாக சிறப்பு அந்தஸ்து குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் செய்யவில்லை. மாநில பிரிவினை மசோதாவில் தெரிவித்துள்ளபடி சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இது ஆந்திராவின் உரிமை. ஆனால் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசியல் சுய லாபத்துக்காக, மத்திய அரசிடம் ஆந்திர மக்களின் தன்மானத்தை அடகு வைத்து விட்டார்.

இதனால் வரும் 26-ம் தேதி குண்டூரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். இதற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள், மாணவர்கள், மகளிர் சங்கங்கள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்