கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சைலண்ட் பள்ளத்தாக்கு பகுதியில் கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொன்ற வழக்கில் விசாரணை நடத்த வனவிலங்கு குற்றவிசாரணைப்பிரிவுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்தசம்பவத்தில் முழுமையான அறிக்கையை கேரள அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திருந்த கர்ப்பிணி பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழக்கை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப்பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானை தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதமடைந்தன.
இந்த சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றுத்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்றநிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. அந்த யானையைக் காப்பாற்ற வனத்துறையினர் இரு யானைகள் மூலம் முயன்றும் பலனளிக்கவில்லை.
அந்த பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யாைனயைக் கொன்ற சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி்க்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயிவிஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ மண்ணார்காடு வனச்சரகத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “கேரளாவில் யானைக்கு அளிக்கப்பட்ட அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து அதை கொலை செய்த சம்பவம் கொடூரமானது. இந்த தவறைச் செய்வர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான முழுமையான அறிக்கையை கேரள அரசிடம் இருந்து கேட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்
இதுகுறி்த்த மண்ணார்காடு வனச்சரகத்தின் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ வேளாண் பயிர்களை சேதம் செய்கிறது என்று எண்ணி விவசாயிகள் யாரேனும் இதுபோல் அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து யானையைக் கொன்றிருக்கலாம். விசாரணை தொடங்கிவிட்டது விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago