பைலட்டுக்கு கரோனா பாசிட்டிவ்: மாஸ்கோ பறந்த  ஏர் இந்தியா விமானம் பாதியிலேயே டெல்லி திரும்பியது 

By பிடிஐ

மாஸ்கோவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க டெல்லியிலிருந்து பயணிகள் இல்லாமல் பணியாளர்களுடன் மட்டுமே புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது, காரணம் விமானிக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஏர் இந்தியா அதிகாரிகள் கூறும்போது, “ஏ320 விமானம் வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர பயணிகள் இல்லாமல் மாஸ்கோ புறப்பட்டது. இது உஸ்பெகிஸ்தான் வான்வெளியை எட்டியவுடன் பைலட்களில் ஒருவருக்கு கரோனா இருப்பது தரையில் இருந்த அதிகாரிகளுக்கு உறுதி செய்யப்பட்டது.

விமானத்தை உடனே டெல்லிக்கு வரவழைத்தோம் மஹ்டியம் 12.30 மணிக்கு விமானம் டெல்லி திரும்பியது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மாஸ்கோவுக்கு வேறொரு விமானம் செல்லவிருக்கிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்