உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ல கிராமம் ஒன்றில் பசுக்கொலை தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரைக் கைது செய்யச் சென்ற போலீஸார் மீது கிராம மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர், இதில் 3 போலீஸார் ஒரு சப் இன்ஸ்பெக்டர் காயமடைந்தனர்.
ஜின்ஜானா காவல் நிலைய சரகத்துக்குள் வரும் தப்ரனா கிராமத்தில் செவ்வாய் இரவு இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து 100 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரி வினீத் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
அஃப்சல் என்ற குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய சென்றனர் போலீஸார். அப்போது போலீஸார் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தி அஃப்சலைக் காப்பற்ற மக்கள் முயற்சி எடுத்தனர்.
பிறகு கூடுதல் போலீஸாரை அனுப்பி அஃப்சல் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டது முஸ்லிம் என்பதால் கிராமத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
58 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago