பசுக்கொலை தொடர்பாக ஒருவரைக் கைது செய்யச் சென்ற போலீஸார் மீது கிராமத்தினர் கல்வீச்சு : உ.பி.யில் 30 பேர் கைது

By பிடிஐ

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ல கிராமம் ஒன்றில் பசுக்கொலை தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரைக் கைது செய்யச் சென்ற போலீஸார் மீது கிராம மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர், இதில் 3 போலீஸார் ஒரு சப் இன்ஸ்பெக்டர் காயமடைந்தனர்.

ஜின்ஜானா காவல் நிலைய சரகத்துக்குள் வரும் தப்ரனா கிராமத்தில் செவ்வாய் இரவு இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து 100 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரி வினீத் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

அஃப்சல் என்ற குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய சென்றனர் போலீஸார். அப்போது போலீஸார் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தி அஃப்சலைக் காப்பற்ற மக்கள் முயற்சி எடுத்தனர்.

பிறகு கூடுதல் போலீஸாரை அனுப்பி அஃப்சல் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டது முஸ்லிம் என்பதால் கிராமத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்