ஆந்திராவில் இன்று பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பேருந்து நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. பல மாநிலங்களில் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் போக்குவரத்து, கடைகள் திறப்பு என பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஆந்திராவில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக 434 வழித்தடங்களில் மொத்தம் 1683 பேருந்துகள் இயக்கப்படுகிறது.கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் மட்டுமே முதல்கட்டமாக பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் முககவசம் அணிந்து சமூகவிலக்கலுடன் மட்டுமே பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது. அதுபோலவே முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதுபோலவே பேருந்து நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
14 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago