கரோனா பாதிப்பு இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்குகிறது: 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு பாஸிட்டிவ்; மகாராஷ்டிராவில் 19 ஆயிரமாக அதிகரிப்பு

By பிடிஐ

இந்தியாவில் கரோனா வல்லரக்கனின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 3,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 95 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59 ஆயிரத்து 662 ஆக அதிகரித்து 60 ஆயிரத்தை நெருங்குகிறது. 39 ஆயிரத்து 847 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 ஆயிரத்து 847 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பும் 2 ஆயிரத்தை நெருங்கி, 1,981 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29.91 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் மகாராஷ்டிராவில் 37 பேர், குஜராத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 9 பேர், மத்தியப் பிரதேசத்தில் 7 பேர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 4 பேர், ஆந்திரா, தமிழகத்தில் தலா 3 பேர், டெல்லியில் இருவர், பஞ்சாப், ஹரியாணாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 37 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 731 ஆக அதிகரித்துள்ளது அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 24 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 449 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நேற்று 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 9 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் நேற்று இருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 68 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் 4 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 29.

உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 66 ஆகவும், கர்நாடகாவில் 30 ஆகவும் , ஆந்திராவில் 41 ஆகவும் அதிகரித்துள்ளது. பஞ்சாப்பில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 9 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணாவில் 8 பேரும், பிஹாரில் 5 பேரும், ஜார்க்கண்டில் 3 பேரும், இமாச்சலப் பிரதேசம், ஒடிசாவில் தலா 2 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,063 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,470 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 6,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,020 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 7,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 3,579 பேரும், தமிழகத்தில் 6,009 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,605 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 3,341 பேரும், தெலங்கானாவில் 1,133 பேரும், கேரளாவில் 503 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 484 பேர் குணமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் 3,214 பேர், ஆந்திராவில் 1,887 பேர், கர்நாடகாவில் 753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 823 பேர், மேற்கு வங்கத்தில் 1,678 பேர், பஞ்சாப்பில் 1,731 பேர், ஹரியாணாவில் 647 பேர், பிஹாரில் 571 பேர், அசாமில் 59 பேர், உத்தரகாண்டில் 63 பேர், ஒடிசாவில் 271 பேர், சண்டிகரில் 150 பேர், சத்தீஸ்கரில் 59 பேர், லடாக்கில் 42 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 132 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 50 பேர், திரிபுராவில் 118 பேர், புதுச்சேரியில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 6 பேர் குணமடைந்தனர்.

மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மேகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்