நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து, கர்நாடகாவில் 42 நாட்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் நேற்றுகாலை 7 மணிக்கு திறக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த மதுப் பிரியர்கள் அதிகாலை முதலே மதுக் கடைகளை நோக்கி படையெடுத்தனர்.
பெங்களூருவில் மதுக் கடைகளின் முன்பாக கூட்டம் அலைமோதியதால் பெண்களுக்கு என தனி வரிசை ஒதுக்கப்பட்டது. அதனால் ஆண்களும், பெண்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையாகநின்று பைகளில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால், கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல், அத்திப்பள்ளி ஆகிய பகுதிகளில்கூட்டம் அலை மோதியது. ஒசூர், கிருஷ்ணகிரியில் இருந்துஏராளமானோர் அங்கு குவிந்ததால் வாடிக்கையாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி சரி செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago