வறண்ட வடக்கு கர்நாடகாவுக்காக தண்ணீர் திறந்துவிடுங்கள்:  மகாராஷ்டிராவிடம் எடியூரப்பா மன்றாடல் 

By பிடிஐ

வறட்சிப்பகுதியான வடக்குக் கர்நாடகாவுக்காக தண்ணீர் திறந்து விடுமாறு மகாராஷ்டிரா முதல்வரிடம் கர்நாடகாவின் பாஜக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொய்னா அணை மற்ரும் உஜ்ஜயினி நீர்த்தேக்கங்களிலிருந்து 3 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுமாறு மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எடியூரப்பா எழுதிய கடிதத்தில், “பெலாகவி, விஜயபுரா, பாகல்கோட், காலாபுர்கி, யாத்கிர், ரய்ச்சூர் மாவட்டங்களில் மார்ச் மாதம் முதலே வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் உள்ளது.

கடந்த காலங்களில் மகாராஷ்ட்ரா அரசு தண்ணீர் கேட்ட போது எங்களுக்கு திறந்து விட்டது.

எனவே இந்த முறையும் 3 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். கொய்னாவிலிருந்து கிருஷ்ணா நதிக்கும், உஜ்ஜயினி நீர்த்தேக்கத்திலிருந்து பிமா நதிக்கும் மனிதார்த்த அடிப்படையில் குடிநீருக்காக திறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம், என்று எடியூரப்பா மன்றாடியுள்ளார்.

கர்நாடகா அரசு ஏப்ரல் 30ம் தேதி 49 தாலுக்காக்கள், 18 மாவட்டங்கள் ஆகியவற்றை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்தது குறிப்பிடத்தக்க்து

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சினிமா

12 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்