இந்தியாவில் முதல்முறையாக 24 மணிநேரத்தில் 2,293 பேர் கரோனாவில் பாதிப்பு: அதிகபட்சமாக 71 பேர் உயிரிழப்பு; மகாராஷ்டிராவில் ஆயிரம் பேர் பாஸி்ட்டிவ்

By ஐஏஎன்எஸ்

கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இருக்கும் இந்தியாவில் நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து வருகிறது, முதல் முறையாக கடந்த 24 மணிநேரத்தில் 2,293 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிகபட்சமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கரோனா பாதிப்பு இந்தியாவில் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பாதிப்பை எட்டியது இல்லை, முதல்முறையாக நேற்று எட்டியுள்ளது. அதேபோல உயிரிழப்பிலும் 71 பேர் என்பது அதிகபட்சமான உயிரிழப்பாகும்

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது. இதில் 9,951 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 26,167 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,218 ஆக அதிகரித்துள்ளது

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 22 ேபர் உயிரி்ழந்ததால் பலி எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் நேற்று இருவர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 61 பேரும், ராஜஸ்தானில் 4 பேர் உயிரிழந்ததால் 62 ஆகவும் அதிகரி்த்துள்ளது. தெலங்கானாவில் நேற்று உயிரிழப்பு இல்லாததால் 26 பேர் என்ற எண்ணிக்கை தொடர்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது, தமிழகத்தில் 28 பேர், கர்நாடகாவில் 22 பேர், மேற்கு வங்கத்தில் தலா 33 பேர், பஞ்சாப்பில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணா, பிஹார், ஜார்க்கண்ட், தலா 3 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து எட்டு பேருக்கு கரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,506 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,879 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 3,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,167 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 4,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 2,666 பேரும், தமிழகத்தில் 2,526 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,312 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,719 பேரும், தெலங்கானாவில் 1,039 பேரும், கேரளாவில் 497 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், 392 ேபர் குணமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் 2,328 பேர், ஆந்திராவில் 1,463 பேர், கர்நாடகாவில் 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 639 பேர், மேற்கு வங்கத்தில் 795 பேர், பஞ்சாப்பில் 480 பேர், ஹரியாணாவில் 360 பேர், பிஹாரில் 471 பேர், அசாமில் 43 பேர், உத்தரகாண்ட்டில் 58 பேர், ஒடிசாவில் 149 பேர், சண்டிகரில் 88 பேர், சத்தீஸ்கரில் 43 பேர், லடாக்கில் 22 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 111 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 5 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசத்தில் யாரும் பாதி்க்கப்படவில்லை, மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்